.webp)
-559065.jpg)
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - நயினாதீவிற்கருகில் நேற்று(16) படகு விபத்திற்குள்ளானதில் மீட்கப்பட்ட 10 பேரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்திற்குள்ளான அனைவரும் ஆரோக்கியமாக இருப்பதாக யாழ்ப்பாண வைத்தியசாலையின் பணிப்பாளர், டொக்டர் த.சத்தியமூர்த்தி நியூஸ் ஃபெஃஸ்ட்க்கு தெரிவித்தார்.
குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகே நேற்று மாலை நயினாதீவிற்கருகில் விபத்திற்குள்ளானது.
படகில் 08 பயணிகளும் 2 படகோட்டிகளும் இருந்ததாக கடற்படை பேச்சாளர், கொமாண்டர் சமிந்த வலாகுளுகே தெரிவித்தார்.
