.webp)

Colombo (News 1st) டித்வா சூறாவளியின் பின்னர் நாட்டின் மறுசீரமைப்பு பணிகளுக்காக, ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் டொலர் அவசரகால உதவியை வழங்கியுள்ளது.
இதில் 100 மில்லியன் டொலர் கடன் தொகையும் மற்றுமொரு 100 மில்லியன் டொலர் சலுகை கடன் தொகையும் அடங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த திட்டங்களை செயற்படுத்துவதற்கும் அதன் தரத்தை உறுதிப்படுத்துவதற்கும் 05 இலட்சம் டொலர் தொழில்நுட்ப உதவி மானியமும் இந்த அனுமதிக்கப்பட்ட உதவிப்பொதியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
சேதமடைந்த வீதிகள் மற்றும் நீர்ப்பாசன உட்கட்டமைப்புகளை மறுசீரமைத்தல், பாதிக்கப்பட்ட சிறு தோட்ட உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்தல், அத்துடன் கடுமையாக சேதமடைந்த அல்லது அழிவடைந்த வீடுகளை மறுசீரமைக்க ஆதரவளிப்பதுமே இந்த அவசர உதவிப்பொதியின் நோக்கமாகும்.
போக்குவரத்து, நீர்ப்பாசனம், விவசாயம் மற்றும் இடர் முகாமைத்துவதற்கு பொறுப்பான அரச நிறுவனங்கள் ஊடாக இந்த திட்டம் செயற்படுத்தப்படும் எனவும் இதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்ட ஆலோசகர்களின் ஆதரவு கிடைக்கும் எனவும் இணையத்தள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
