.webp)
-554771.jpg)
Colombo (News 1st) வீரவில சிறைச்சாலை சந்தி பகுதியில் இன்று(18) இடம்பெற்ற பஸ் விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.
கதிர்காமத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் மற்றும் கராப்பிட்டியவிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த பஸ் ஆகியன நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.
விபத்தில் காயமடைந்தவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் தெபரவெவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
