அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகளுக்காக விலைமனு கோரல்

அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகள் அனைத்தும் 2028ஆம் ஆண்டில் நிறைவு செய்ய திட்டம்

by Staff Writer 09-01-2026 | 1:27 PM

Colombo (News 1st) மத்திய அதிவேக வீதியின் ரம்புக்கனை - கலகெதரவுக்கிடையேயான பகுதியின் நிர்மாணப் பணிகளுக்காக விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.

இந்த பகுதியின் நீளம் 19 கிலோமீற்றர்களாகும்.

இதன் நிர்மாணப்பணிகளை எதிர்வரும் மே மாதத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மத்திய அதிவேக வீதியின் பொத்துஹர - ரம்புக்கனவுக்கிடையிலான பகுதியில் காப்பட் இடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்  அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிர்மாணப்பணிகள் அனைத்தும் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் நிறைவு செய்யப்படவுள்ளன. 

கடந்த 05 வருடங்களாக நிர்மாணப்பணிகள்  இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட மத்திய அதிவேக வீதியின் கடவத்த - மீரிகம பகுதியின் நிர்மாணப்பணிகள் தற்போது 40 வீதம் நிறைவடைந்துள்ளன. 

நிர்மாணப்பணிகளை எதிர்வரும் 2028 ஆம் ஆண்டில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.