.webp)
-552614.jpg)
Colombo(News 1st) தெரணியகல, நூரி தோட்டத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 14 வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார்.
சிறுவனொருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டுக்கமைய சம்பவ இடத்திற்கு பொலிஸார் நேற்று(02) சென்றிருந்தனர்.
அங்கு முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் போது வீடொன்றுக்குள் சிறுவன் தரையில் வீழ்ந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவன் நூரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்திருந்ததாக வைத்தியர்களினால் உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
சந்தேகத்தின்பேரில் சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
