.webp)
Colombo (News 1st) நீதிமன்றத்தில் சரணடைந்த சம்பத் மனம்பேரியை 07 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சட்டத்தரணிகள் ஊடாக அவர் இன்று(17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
மித்தெனிய பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் இரசாயனப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவருக்கெதிராக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு எதிர்வரும் 24ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.