.webp)
தட்டுப்பாடு மற்றும் தாமதங்கள் இன்றி மருந்துகள் தொடர்ச்சியாக வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று(22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
மருந்துகளின் கொள்முதல் மற்றும் விநியோகம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் அந்தப் பொறிமுறையை சரிப்படுத்தி தட்டுப்பாடு மற்றும் தாமதங்கள் இல்லாமல் மக்களுக்கு மருந்துகளை தொடர்ச்சியாக வழங்குவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் .
மருந்து கொள்முதல் செயல்முறை மற்றும் விநியோக பொறிமுறையில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைகள், பலவீனங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
வைத்தியசாலைகளில் மருந்து பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
நாட்டில் மீண்டும் இதுபோன்ற நிலைமை ஏற்படாமலிருக்க நடவடிக்கை எடுக்குமாறும் அதற்குத் தேவையான நீண்டகால திட்டங்களை உடனடியாக தயாரிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
வைத்தியசாலைகளுக்கு மருந்துகளைப் பெற்றுக்கொள்ளத் தேவையான நிதி ஏற்கனவே திறைசேரியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நாட்டு மக்களுக்கு தரம் வாய்ந்த சுகாதார சேவைகளை உறுதி செய்வதில் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.