.webp)
கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் வருடாந்த சிறந்த நிறைவேற்று அதிகாரியாக நலீன் ஜயவர்தன தெரிவானார்.
எஸ்லோன் லங்கா தனியார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அவருக்கு கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் வருடாந்த மாநாட்டில் சிறந்த நிறைவேற்று அதிகாரிக்கான பதக்கம் சூட்டப்பட்டது.
மகாராஜா குழுமத்தின் 45ஆவது வருடாந்த மாநாடு தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தாபோ ம்பெக்கி தலைமையில் இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத்தில் நேற்று(27) நடைபெற்றது.
கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவர் சஷி ராஜமகேந்திரன் அவர்கள் மற்றும் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் விசேட அதிதிகள் உள்ளிட்ட பலர் இந்த மாநாட்டில் பங்குபற்றினர்.
வரையறுக்கப்பட்ட கெபிட்டல் மகாராஜா குழுத்தின் பல நிறுவனங்கள் ஊடாக பல்வேறு துறைகளில் இலங்கை மக்களுக்காக சேவையாற்றிய நிறைவேற்று அதிகாரிகளை கௌரவிப்பதற்காக வருடாந்தம் இந்த நிகழ்வு நடத்தப்படுகின்றது.
கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் 5 நிறைவேற்று அதிகாரிகள் இம்முறையும் விசேட பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
1- கெவில்டன் லிமிடெட்டின் சமீர தொடங்கொட
2 - சிரச தொலைக்காட்சியின் தர்மஸ்ரீ ஏகநாயக்க
3 - எஸ்லோன் லங்கா தனியார் நிறுவனத்தின் H. W. S. S. சஞ்சீவ.
4 - ஏ.எப்.ஜோன்ஸ் நிறுவனத்தின் பெருமாள் செல்வகுமார்
5 - குரூப் ஐ.டி. யின் வாசனா மல்லிகாஹேவா
ஆகியோருக்கு இந்த விசேட பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன.
கெப்பிட்டல் மகாராஜா குழுமத்துக்கு உரிய நிறுவனங்களில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட நிறுவனத்திற்காக வழங்கப்படுகின்ற ஆர்ஆர் விருது இம்முறை எம்.ரி.வி தனியார் நிறுவனம் வசமானது.
வருடாந்த சிறந்த நிறைவேற்றதிகாரியை தெரிவு செய்வதற்காக 5 நிறைவேற்றதிகாரிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
01.நியோமி தலவங்ச
02.சமந்த அல்விஸ்
03.கயான் சம்பத்
04.நலீன் ஜயவர்தன
05.தமாரா குடாலியனகே
இவர்களில் கெப்பிட்டல் மகாராஜா குழுமத்துக்கு சொந்தமான எஸ்லோன் லங்கா தனியார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நலீன் ஜயவர்தன 2024 ஆம் ஆண்டின் சிறந்த நிறைவேற்றதிகாரியாக தெரிவு செய்யப்பட்டார்.