.webp)
Colombo (News 1st) சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் இன்றாகும்(26).
போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் பேரழிவை கட்டுப்படுத்துவதற்கும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை நிறுத்துவதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு 1987ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
இதனூடாக எதிர்கால சந்ததியினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் போதைப்பொருள் பயன்பாட்டின் பாதிப்பை முன்கூட்டியே தடுப்பதற்கும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு பெறப்பட்ட தரவுகளுக்கமைய சுமார் 296 மில்லியன் மக்கள் போதைப்பொருளை பயன்படுத்துவதாக ஐ.நாவின் போதைபொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகம் அறிவித்திருந்தது.