துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் 2 சடலங்கள் மீட்பு

துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் 2 இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

by Staff Writer 25-06-2025 | 3:00 PM

Colombo (News 1st) மித்தெனிய தோரகொலயாய பகுதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட இரு இளைஞர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த கொலை சம்பவம் இடம்​பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

25 முதல் 30 வயதுக்கிடைப்பட்ட இருவரே இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.