.webp)
Colombo (News 1st) 369 இலட்சம் ரூபா வருமான வரியை செலுத்தத் தவறியமைக்கு எதிராக உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராவதை தவிர்த்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(23) உத்தரவிட்டுள்ளது.
2010 - 2012 காலப்பகுதியில் வருமான வரியை செலுத்தாமைக்கு எதிராக உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளரால் 2023ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.