கடமைகளை பொறுப்பேற்றார் கொழும்பு மாநகர மேயர்

by Staff Writer 18-06-2025 | 10:48 PM

Colombo (News 1st) கொழும்பு மாநகர சபையின் புதிய மேயர் வ்ராய் கெலீ பல்தஸார் இன்று(18) தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

கொழும்பு மாநகர சபை வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

பிரதியமைச்சர் சுனில் வட்டகல முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்த பின்னர் சர்வ மத ஆசீர்வாதத்துடன் மேயர் கடமைகளை ஆரம்பித்தார்.

கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் ஹேமந்த குமாரவும் இன்று(18) கடமைகளை பொறுப்பேற்றார்.