.webp)
Colombo (News 1st) கொழும்பு மாநகர சபையின் மேயராக வ்ராய் கெலீ பல்தஸார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேயரை தெரிவு செய்வதற்கான முதலாவது அமர்வு மாநகர ஆணையாளர் சாரங்கிகா ஜயசுந்தர தலைமையில் இன்று(16) காலை ஆரம்பமானது.
தேசிய மக்கள் சக்தி சார்பில் வ்ராய் கெலீ பல்தஸாரின் பெயரும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ரீசா ஸரூக்கின் பெயரும் கொழும்பு மேயர் பதவிக்கு முன்மொழியப்பட்டன.
இதனை தொடர்ந்து நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட வ்ராய் கெலீ பல்தசாருக்கு 61 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட ரீசா ஸரூக்கிற்கு 54 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
117 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் 02 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் ஹேமந்த குமார பிரதி மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.