.webp)
கொழும்பு மாநாகர சபையின் ஆரம்ப அமர்வு இன்று(16) நடைபெறவுள்ளது.
மாநகர ஆணையாளர் பாலித நாணயக்கார தலைமையில் இன்று(16) காலை 09.30 அளவில் அமர்வு ஆரம்பமாகவுள்ளது.
இதன்போது கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவு செய்யப்படவுள்ளார்.
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தி கொழும்பு மாநகர சபையை வெற்றி கொண்டது.
இதற்கமைய தேசிய மக்கள் சக்தி, கொழும்பு மாநகர சபையில், 48 உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டது.
எனினும் ஆட்சியமைக்க கூடிய பெரும்பான்மையை தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொள்ளவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தி 29 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசிய கட்சி 13 உறுப்பினர்களையும் வெற்றி கொண்டன.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 5 உறுப்பினர்களையும் பெற்றுக் கொண்டுள்ளது.
அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 04 உறுப்பினர்களை பெற்றுக் கொண்டுள்ளது.
சுயேட்சைக் குழு இலக்கம் - 03, மூன்று ஆசனங்களையும், சுயேட்சைக் குழு இலக்கம் 04 மற்றும் 05 என்பன தலா இரண்டு ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
கொழும்பு மாநகர சபைக்கு தேசிய மக்கள் சக்தி சார்பில்
விராய் கெலீ பல்தசார் மேயர் வேட்பாளராக போட்டியிடுகின்றார்.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ரீசா ஸரூக், எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக போட்டியிடுகின்றார்.
கொழும்பு மாநகர சபையின் ஆட்சியதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காக 117 ஆசனங்களில் 59 ஆசனங்களை கைப்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.