.webp)
Colombo (News 1st) சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை துணை முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் இன்று(15) முற்பகல் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கு பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை துணை முகாமைத்துவ பணிப்பாளரொருவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
இலங்கையின் மீட்சிக்கான பாதை, கடன் மற்றும் நிர்வாகம் எனும் தொனிப்பொருளில் நிதியமைச்சு, இலங்கை மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியன இணைந்து நாளை மறுதினம் நடத்தவுள்ள மாநாட்டில் பிரதம விருந்தினராக கீதா கோபிநாத் கலந்துகொள்ளவுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சியின் முதற்கட்டம் நிறைவடைந்துள்ள நிலையிலேயே நாளை மறுதினம்(17) இந்த மாநாடு நடைபெறவுள்ளது.