.webp)
தேசிய லொத்தர் சபையின் செயற்பாட்டு பணிப்பாளராக செயற்பட்ட துசித்த ஹல்லொலுவ எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கோட்டை பிரதம நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
துசித ஹல்லொலுவ செயற்பாட்டு பணிப்பாளராக கடமையாற்றிய காலப்பகுதியில் தேசிய லொத்தர் சபையிடம் பெற்றுக்கொண்ட 470,000 ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கணினி மற்றும் தொலைபேசியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் முன்னடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய கடந்த 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.