கொழும்பு கொச்சிக்கடை பு.அந்தோனியார் ஆலய திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் 191 ஆவது வருடாந்த திருவிழா..

by Staff Writer 13-06-2025 | 6:46 PM

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் 191 ஆவது வருடாந்த திருவிழா இன்று(13) நடைபெறுகின்றது.

காலை 8 மணிக்கு ஆரம்பமான திருவிழா திருப்பலியை கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் அன்டன் ரஞ்சித் ஆண்டகை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இம்முறை திருவிழாவிற்கான ஊடக அனுசரணையை சக்தி, சிரச ஊடக வலையமைப்பு வழங்குகின்றது.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு இன்று(13) அதிகாலை 04 மணி முதல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.


1806 ஆம் ஆண்டு சிற்றாலயமாக கொழும்பில் சனநெரிசல் மிக்க பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இந்த தேவாலயத்திற்கு கோவாவில் இருந்து புனித அந்தோனியாரின் திருச்சொரூபம் 1822 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் அனைவரதும் நல்லிணக்கத்தை வௌிப்படுத்தும் வழிபாட்டுத்தலமாக காணப்படுகிறது.

புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலிகளில் அதிகளவிலான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இன்று(13) மாலை 5.30 மணிக்கு புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி ஆரம்பமாகவுள்ளது.

பவனி கொச்சிக்கடை தேவாலயத்தை வந்தடைந்ததும் இரவு 8 மணிக்கு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையினால் புனித அந்தோனியார் திருச்சொரூப ஆசீர்வாதம் வழங்கப்படவுள்ளது.