ஜனாதிபதி - ஜேர்மனி வௌிவிவகார அமைச்சர் சந்திப்பு

ஜனாதிபதி அனுர குமார - ஜேர்மனி வௌிவிவகார அமைச்சர் இடையே கலந்துரையாடல்

by Staff Writer 12-06-2025 | 7:25 AM

Colombo (News 1st) ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் அந்நாட்டு வௌிவிவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் இலங்கை மற்றும் ஜேர்மனி ஜனாதிபதிகள் இருவரும் நேற்று சந்தித்திருந்தனர்.

இந்த கலந்துரையாடலில் இருநாடுகளுக்கிடையேயான நீண்ட கால உறவு, பொருளாதார வளர்ச்சி, ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜேர்மனி ஜனாதிபதி Frank-Walter Steinmeier தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் முன்னெடுக்கப்படும் மறுசீரமைப்புகளுக்கு ஜேர்மனியின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்குமென அந்நாட்டு ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.