.webp)
Colombo (News 1st) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு நேற்று(11) நடைபெற்றது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோரை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையில் முன்னெடுக்கப்படும் இருதரப்பு முயற்சிகள் மற்றும் சமீபத்தைய அரசியல் முன்னேற்றங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபை தேர்தலின் தாமதம் தொடர்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதன்போது சுட்டிக்காட்டியதுடன் கிழக்கில் இந்திய நிதியுதவியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பொறிமுறையின் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.