.webp)
Colombo (News 1st) களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான நுவரெலியாவிலுள்ள தேயிலை தொழிற்சாலையொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த சந்தேகநபர்கள் தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மே மாதம் 30ஆம் திகதி களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்குட்பட்ட பீட்ரூ தோட்ட தொழிற்சாலைக்குள் சிலர் அத்துமீறி நுழைந்ததாக கூறி தோட்ட நிர்வாகத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு நுவரெலியா நீதவான் முன்னிலையில் இன்று(09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சந்தேகநபர்கள் 10 பேரும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
வழக்கில் இன்று ஆஜரான சந்தேகநபர்களும் சம்பவ தினத்தன்று அத்துமீறிய சம்பவம் தொடர்பில் தோட்ட நிர்வாகத்தினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள காணொளியில் உள்ள நபர்களும் ஒரே நபர்களா என்பதை உறுப்படுத்த வேண்டும் என நீதவான் இன்று கட்டளை பிறப்பித்தார்.
பிரதிவாதிகளின் நிழற்படங்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 4ஆம் திகதி வரை ஒத்திவைத்து நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.