.webp)
Colombo (News 1st) நிறைவுகாண் வைத்திய சேவை தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.
பதவியுயர்வுகளில் ஏற்படும் தாமதம், இணை சுகாதார விஞ்ஞான பீட பட்டதாரிகளை சேவையில் இணைத்துக்கொள்ளாமை உள்ளிட்ட 5 பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இரசாயன ஆய்வுகூட நிபுணர்கள், மருந்தாளர்களின் சங்கம் உள்ளிட்ட 05 தொழிற்சங்கங்கள் பணிப்கிஷ்கரிப்பில் இணைந்துள்ளதாக நிறைவுகாண் வைத்திய நிபுணர்களின் கூட்டு சம்மேளனத்தின் செயலாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்தார்.