.webp)
Colombo (News 1st) முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஸ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
சேதனப்பசளையை நாட்டிற்கு கொண்டுவந்ததில் இடம்பெற்ற மோசடி குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் இன்று காலை ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளார்.