.webp)
மழையுடனான வானிலையால் இதுவரையில் மின்தடை தொடர்பில் 70,023 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
இன்று(02) காலை 8 மணி வரையான காலப்பகுதி வரை 50,423 பேருக்கான மின் விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியிலாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்தார்.
நாட்டில் நிலவிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக மின் துண்டிப்பு ஏற்பட்ட 70 வீதமான இடங்களுக்கான மின் விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.