கலாஓயாவில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

கலாஓயாவில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 04-05-2025 | 9:55 AM

Colombo (News1st) புத்தளம், வண்ணாத்திவில்லு பகுதியில் அமைந்துள்ள கலாஓயாவில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இதன்போது 42 வயதானவர் உயிரிழந்ததுடன், 22 வயதான பெண் காணாமல் போயுள்ளார் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவரும் காணாமல் போயுள்ள பெண்ணும் மேலும் சிலருடன் கலாஓயாவில் நீராடிக் கொண்டிருந்த வேளையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டது.

இருவரும் முந்தல் மற்றும் கற்பிட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போன பெண்ணை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.