.webp)
Colombo (News1st) ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ கண்காணிப்பு செயற்றிட்டக்குழு இலங்கைக்கு இன்று(28) வருகை தரவுள்ளது.
இலங்கைக்கு வழங்கப்படும் GSP+ வரிச் சலுகைகள் தொடர்பான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதில் இலங்கை எட்டியுள்ள முன்னேற்றங்களை மதிப்பீடு செய்வதே குறித்த குழுவின் நோக்கமாகும்.
இந்தக் குழுவினர் எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளனர்.