மரத்திலிருந்து தவறிவீழ்ந்து ஒருவர் பலி

மரத்திலிருந்து தவறிவீழ்ந்து ஒருவர் பலி

by Staff Writer 27-04-2025 | 3:20 PM

Colombo (News1st)நானுஓயா - கிளாஸ்சோ  (Glassaugh) பகுதியில் மரத்திலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் 60 அடி உயர மரத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நானுஓயா - கிளாஸ்சோ பகுதியைச் சேர்ந்த 63 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.