.webp)
Colombo(News1st) ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 28ஆம் திகதி நாட்டுக்கு வருகை தரவுள்ளது.
இலங்கைக்கு வழங்கப்படும் GSP+ வரிச் சலுகைக்கான நிபந்தனைகளின் முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு செய்வதற்காக குறித்த குழு நாட்டுக்கு வருகை தரவுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவினர் நாளைமறுதினம் முதல் எதிர்வரும் 07ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.