.webp)
Colombo (News1st)
கொக்கெய்ன் போதைப்பொருள் தொகையுடன் வெளிநாட்டு பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காட்போட் அட்டையில் ஒட்டப்பட்ட சிறிய கொக்கெய்ன் பொதிகளை தமது பயணப்பைக்குள் மறைத்து வைத்து அவர் நாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்தது.
குறித்த பொதிகளில் அடங்கியுள்ள கொக்கெய்ன் அளவை கணக்கிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்தது.