தேசிய ஊழல் எதிர்ப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

2025 - 2029 தேசிய ஊழல் எதிர்ப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

by Staff Writer 09-04-2025 | 2:17 PM

Colombo (News 1st)  2025 - 2029 தேசிய ஊழல் எதிர்ப்பு வேலைத்திட்டம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று(09) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதற்கான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ, சட்ட மாஅதிபர் பாரிந்த ரணசிங்க, மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமும் மேல் நீதிமன்ற நீதிபதியுமான ரங்க திசாநாயக்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதனிடையே, தேசிய ஊழல் எதிர்ப்பு செயற்றிட்டத்திற்கு அமைய கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் உள்விவகார பிரிவு இன்று(09) ஸ்தாபிக்கப்பட்டது.

தேசிய ஊழல் எதிர்ப்பு செயற்றிட்டத்திற்கு அமைய மாவட்ட செயலகங்களில் உள்விவகார பிரிவுகளை ஆரம்பித்தல் எனும் கருப்பொருளுக்கு அமைய கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் புதிய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.