.webp)
Colombo (News1st)தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் 102 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது.
தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு 15 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையங்களுக்கு 87 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டது.
கடந்த மாதம் 20ஆம் திகதி முதல் இந்த மாதம் 05ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 712 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது.
இவற்றில் வன்முறை செயற்பாடுகள் தொடர்பில் 04 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.