.webp)
Colombo (News1st)
சில்லறை விலையில் மதுபானத்தை விற்பனை செய்த குற்றச்சாட்டில் 02 விற்பனை நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்தது.
பத்தரமுல்ல மற்றும் பொரளை ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறியமைக்காக 2 விற்பனை நிலையங்களுக்கும் இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்தது.