.webp)
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எதிர்வரும் 8ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று(01) காலை அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாண முதலமைச்சராக பதவிவகித்த காலப்பகுதியில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கடந்த 27ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
நிதி மோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக 3 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் முதல் 2 வழக்குகளுக்காக பிணை வழங்கப்பட்டதுடன், மற்றுமொரு வழக்கிற்காக இன்று வரையில் விளக்கமறியல் உத்தரவும் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.