நாட்டில் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம்

நாட்டில் 08 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம்

by Chandrasekaram Chandravadani 25-03-2025 | 11:24 AM

Colombo (News1st) நாட்டில் 08 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்தது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட 08 மாவட்டங்களின் 37 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.