.webp)
Colombo (News1st)கொழும்பு - கண்டி வீதியின் வறக்காபொல ஹெலகல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபையின் 2 பஸ்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் வறக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.