கடலில் நீராடச் சென்ற இளைஞன் உயிரிழப்பு

கடலில் நீராடச் சென்ற இளைஞன் உயிரிழப்பு

by Staff Writer 22-03-2025 | 6:20 PM

யாழ்ப்பாணம் இளவாலை சேந்தான்குளத்தில் கடலில் நீராடச் சென்ற இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பாக விசாரனைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இணுவில் பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் தனது நண்பர்களுடன் நேற்று மாலை கடலில் நீராடச் சென்ற போது இந்த துக்ககரமான சம்பவம் இடம்பெற்றது.