.webp)
Colombo (News 1st) பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை இந்த வாரத்திற்குள் பாராளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.