.webp)
COLOMBO (News1st) - மீகஸ்ஆரே கஜ்ஜா என அழைக்கப்படும் அருண விதானகமகே கொலையானது 5 இலட்சம் ரூபா ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதில் இரண்டரை இலட்சம் ரூபா சந்தேகநபரின் மனைவியின் வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எஞ்சிய பணம் வங்கியில் வைப்பிலிடப்படும் என்ற இணக்கப்பாட்டுடன் இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எவ்வாறாயினும் இதுவரை அந்த பணம் சந்தேகநபருக்கு வழங்கப்படவில்லை என்பது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
மீகஸ்ஆரே கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி மித்தெனிய பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த அவரது 2 பிள்ளைகளும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.