எல்லை தாண்டி மீன்பிடித்த 10 இந்திய மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்த 10 இந்திய மீனவர்கள் கைது

by Staff Writer 20-02-2025 | 11:36 AM

Colombo (News 1st) Sea of Sri Lanka எனும் இலங்கை கடற்பரப்பில் எல்லை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதாகியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

அந்தவகையில் யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் 6 மீனவர்களும் மன்னாரில் 4 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.