![sample image](https://cdn.newsfirst.lk/assets/NEWS-LOGO-Recovered%20(1).webp)
Colombo (News 1st) இலங்கையின் காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்தில் இருந்து விலகுவதாக இந்தியாவின் அதானி நிறுவனம் அறிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நிறுவனம் இலங்கையில் உத்தேசிக்கப்பட்ட 2 காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களில் இருந்து விலகுவதாக அந்நிறுவனம் இலங்கை முதலீட்டு சபையின் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான திட்டங்களினூடாக மின்சார செலவைக் குறைப்பதற்கு அதானி குழுமத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் கடந்த மாதம் அறிவித்தது.