![sample image](https://cdn.newsfirst.lk/assets/NEWS-LOGO-Recovered%20(1).webp)
Colombo (News 1st) பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய பதில் பொலிஸ் மாஅதிபர், சட்டத்தரணி பிரியந்த விஜேசூரியவால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இடமாற்றத்தின் பிரகாரம், கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பலர் பொது கடமைகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
50 புதிய நியமனங்களும் இந்த இடமாற்றத்தில் அடங்குவதுடன், 53 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பொது கடமைகளில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.