பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 88 முறைப்பாடுகள்

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 88 முறைப்பாடுகள் - பொலிஸ்

by Staff Writer 28-10-2024 | 4:42 PM

Colombo (News 1st) 2024 பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 88 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவற்றில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 16 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறும் செயற்பாடுகள் தொடர்பில் 72 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதனிடையே தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 24 மணித்தியாலங்களில் 75 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் முறைப்பாடுகள் முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு 28 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாடுகள் பிரிவிற்கு 47 முறைப்பாடுகளும் கிடைக்கபெற்றுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

கடந்த மாதம் 26ஆம் திகதி முதல் இம்மாதம் 26ஆம் திகதி வரையில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 791 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

தேர்தல் வன்முறை தொடர்பில் 7 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 769 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.