Colombo (News 1st) சட்டவிரோத தேர்தல் பிரச்சார செயற்பாடுகள் தொடர்பில் 100 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு வார காலப்பகுதிக்குள் 39 சம்பவங்கள் தொடர்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த காலப்பகுதிக்குள் 8 இலட்சத்திற்கும் அதிகமான சட்டவிரோத சுவரொட்டிகள் மற்றும் கட்அவுட்கள் அகற்றப்பட்டுள்ளன.
சட்டவிரோத சுவரொட்டிகள், பதாகைகளை அகற்றுவதற்காக 1592 தொழிலாளர்கள் நாடளாவிய ரீதியில் கடமையில் இணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.