இலங்கை கடற்பரப்பில் 16 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் 16 இந்திய மீனவர்கள் கைது

by Staff Writer 24-10-2024 | 9:25 AM

Colombo (News 1st) Sea Of Sri Lanka எனும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு படகில் 8 மீனவர்கள் வீதம் 2 படகிலிருந்தும் 16 மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 16 பேரும் இன்று(24) காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டு கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டவுள்ளனர்.