இஸ்ரேலிய பிரஜைகளுக்கான அறிவிப்பு

அவசர நிலைமைகளின் போது சுற்றுலா - கடற்படைப்பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபரை தொடர்புகொள்ளுமாறு இஸ்ரேலிய பிரஜைகளுக்கு அறிவுறுத்தல்

by Staff Writer 24-10-2024 | 1:11 PM

Colombo (News 1st) நாட்டில் தங்கியுள்ள இஸ்ரேலிய பிரஜைகள், ஏதேனும் அவசர நிலைமைகளை எதிர்நோக்கும் போது அது தொடர்பில் சுற்றுலா மற்றும் கடற்படைப்பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு தெரியப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சுற்றுலா மற்றும் கடற்படைப்பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் தமயந்த விஜய ஶ்ரீயின் 071 859 2651 எனும் இலக்கத்திற்கு தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு அறிவிக்கப்படும் பட்சத்தில் அது தொடர்பில் ஆராயப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தகவல் வழங்குநரின் ஆளடையாளம் உறுதிப்படுத்தப்படுமென்பதால் அது தொடர்பில் ஒத்துழைப்புடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.