எல்பிட்டிய தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு

எல்பிட்டிய தேர்தல் பிரச்சாரம் இன்று(23) நள்ளிரவுடன் நிறைவு

by Staff Writer 23-10-2024 | 4:11 PM

Colombo (News 1st) எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று(23) நள்ளிரவுடன் நிறைவடைகின்றன.

எதிர்வரும் 26ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் வரை பிரசார நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை குழுக்கள் இன்று(23) நள்ளிரவிற்கு பின்னர் பிரசாரத்தில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.