Colombo (News 1st) கல்கிசை - இரத்மலானை ரயில் பணிமனையில் இன்று(23) அதிகாலை துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
ரயில் பணிமனையிலுள்ள சொத்துக்களை திருட முற்பட்ட சந்தேகநபர்கள் ஐவரால் ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேகநபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் மற்றைய சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
காயமடைந்த சந்தேகநபர் மற்றும் ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.