Colombo (News 1st) மட்டக்குளி பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முயற்சித்த போதைப்பொருள் கடத்தல்காரர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்குளி பகுதியில் போதைப்பொருள் வர்த்தகத்தை மேற்கொள்ள இடமளிக்குமாறு கோரி சந்தேகநபர் 50,000 ரூபாவை இலஞ்சமாக வழங்க முற்பட்டுள்ளார்.
பொலிஸார் வழங்கிய தகவலுக்கு அமைய, குறித்த பணத்தை வழங்க முற்பட்ட வேளையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மட்டக்குளியைச் சேர்ந்த 44 வயதான சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.