Colombo (News 1st) இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இலங்கை விமானப்படைக்கு புதிய விமானமொன்றை நன்கொடையாக வழங்கியமைக்காக பாதுகாப்பு செயலாளர் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.