வௌ்ளத்தில் தோணிப் பயணம் ; துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த நபர்

by Staff Writer 13-10-2024 | 4:18 PM

Colombo (News 1st) முல்லேரியா - களனிமுல்ல பகுதியில் வௌ்ளநீரில் மூழ்கி 34 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வௌ்ளம் நிறைந்திருந்த பகுதியில் தோணியில் பயணித்த ஒருவரே தோணி கவிழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

34 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.