பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை - விமல்

பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை - விமல் வீரவன்ச

by Staff Writer 10-10-2024 | 10:48 AM

Colombo (News 1st) இம்முறை பொதுத் தேர்தலில் தமது கட்சி போட்டியிடப் போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் கடந்த கால தொடர்பு மற்றும் அதற்கு மதிப்பளிக்கும் அரசியல் இயக்கமாக ஜனாதிபதிக்கு கிடைத்த மக்கள் ஆணையை பாதுகாப்பதற்காக முன்னிற்பதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக பாராளுமன்ற வகிபாகத்தை விட அதற்கு வௌியில் முன்னெடுக்கப்படும் செயற்பாடு முக்கியமானதாகவும் பலமானதாகவும் அமைய வேண்டும் என அவரது அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய சுதந்திர முன்னணி ஒரு கட்சியாகவோ அல்லது சுயேட்சையாகவோ போட்டியிடாது எனவும் இது கட்சியின் கூட்டுத் தீர்மானம் எனவும் கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்